திற்பரப்பு அருவியில், தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Hai this my official website https://todaynewsbin.blogspot.com/. In this website Tamil News, Medical Tips, Cinema News and Health Tips are publish for you. Use that Properly and forward your friends, Best Wishes For Your Bright Futures.
குமரி மாவட்டம் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில், தண்ணீர் கொட்டுவதால் எராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக, தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளதால், திற்பரப்பு நீர் வீழ்ச்சியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று விடுமுறைதினம் என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து, அருவியில் குளித்தும், படகுசவாரி செய்தும், பூங்காக்களில் குழந்தைகளுடன் விளையாடியும், மகிழ்ந்தனர்.
இதற்கிடையே கோதையார், பேச்சிப்பாறை, சிற்றார், பெருஞ்சாணி பகுதிகளில் மழை பெய்துவருவதால், அருவிக்கு நீர்வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.