Facebook

Menu

Thursday, June 11, 2020

studentsquestionpaper.in

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு அளவில் லாக்டவுன்? தமிழக அரசு இன்று பதில்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு அளவில் லாக்டவுன்? தமிழக அரசு இன்று பதில்

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு அளவில் லாக்டவுனை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதில் தாக்கல் செய்ய உள்ளது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு படுமோசமாக உள்ளது.
சென்னையில் 27,398 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாள்தோறும் 1,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும் வருகிறது. அதேபோல் கொரோனா மரணங்களும் சென்னையில் தொடருகிறது. 

சென்னையில் மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கோரதாண்டவமாடுகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் பொதுநல வழக்குகளை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நேற்று விசாரித்தனர்.

அப்போது அரசு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணிடம், கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 15 நாட்களுக்கு லாக்டவுனை முழு அளவில் செயல்படுத்துகிற திட்டம் அரசிடம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர். 

மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் பதிலை இன்று தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 15 நாட்களுக்கு லாக்டவுன் முழு அளவில் செயல்படுத்தப்படுமா? என்பது இன்று தெரியவரும்.

studentsquestionpaper.in

About studentsquestionpaper.in -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :