பேண்ட் எங்கம்மா.. வெறும் சட்டையுடன் வந்த நடிகையை மானபங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை மலைகா அரோராவின் ஆடையை பார்த்த நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் மலைகா அரோரா. 46 வயதான மலைகா அரோராவும் போனி கபூருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த மகனான அர்ஜூன் கபூரும் காதலித்து வருகின்றனர். ஏற்கனவே திருமணமான மலைகா கடந்த 2017ஆம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியானது.
அதற்காகவே படு கவர்ச்சியான டிரெஸ், ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோக்கள் என வெளியிட்டு வைரலாவார். 16 வயதில் மகன் உள்ள போதும் தன்னை விட 11 வயது குறைவான அர்ஜூன் கபூரை திருமணம் செய்ய உள்ளார் என்பதை அவர்களுக்கு நெருக்கமான வட்டாரமும் தெரிவித்து வருகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார். அதவாது மலைகா தனது சகோதரி அம்ரிதா அரோரா வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது வெள்ளை நிற மேல் சட்டையை மட்டுமே அணிந்திருந்தார் அரோரா.
தொடைக்கு மேல் தெரியும்படி மிக கவர்ச்சியாக உள்ளது அவரது ஆடை. கால்களை முழுவதுமாக மறைத்து ஷு அணிந்துள்ள மலைகா, கீழே எதுவுமே அணியாமல் தில்லாக நடந்து வருகிறார்.
இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பேண்ட் போட மறந்து வெளியே வந்து விட்டீர்கள் என்று மரணமாக கலாய்த்து வருகின்றனர். மலைகா அரோராவின் பேண்ட் விவகாரம்தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.